Friday, October 3, 2008

பாண்டி விளையாடு பாப்பா


சரியா தப்பா எனக் கேட்டு
சரியாகவே
தாண்டி தாண்டி
பாண்டி விளையாடும்,

பத்து வயதில் 'உக்கார்ந்து'
குழந்தை பருவத்தைத் தொலைத்து
'பெரியவள்' ஆகிப்போன
பட்டணத்துப் பாப்பாக்களை

விளையாடத் தடைவிதித்து
வீட்டுக்குள் உக்காரவைக்கும்
உலகில் எல்லாம் தெரிந்த
உள்ளம் உள்ளவர்களுக்கு.,

உங்களுக்குத் தெரியுமா?

'அந்த நாள்' உபாதைகளை
அடியோடு போக்கிடவே நம்
முன்னோர்கள் கண்ட
முழுத்தீர்வு இந்த
விளையாட்டோடு சேர்ந்த
வினை தீர்க்கும் மருந்து

குழந்தை முதல் இதை
தொடர்ந்து வந்தால்
தொடராது அந்தநாள்
உபாதைகள் எதுவும்

உணர்ந்து கொள் உடனே,
தொடரச் சொல் அதனை.

Sunday, September 21, 2008

பூனை குறுக்கே போனால்......

இன்றைய நிலமை:
பூனை குறுக்கேபோனால் சகுனம் சரியில்லை என தலையில் கை வைத்து உட்க்கார்ந்து விடுவோம் நம்மில் பாதி பேர்.
திரும்பி வந்து, தண்ணீர் குடித்து, இழைப்பாறி பின் செல்வோம் மீதி பேர்.
உண்மையில்:
காட்டு வழியே பயணம் செல்லும்போது, சிங்கம் ஏதேனும்( பூனை இனத்தைச் சார்ந்தவை ) நாம் போகும் பாதைக்குக் குறுக்கே செல்ல வாய்ப்புண்டு.சிங்கங்கள் ஒரு வெற்றிடத்தை கடக்க நேர்கையில்,பொதுவாக புதர் மறைவிலோ அல்லது மரத்தின் அடியிலோ சிரிது நேரம் தங்கி தனது பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே தொடர்ந்து செல்லும்.அவ்வாறு அது காத்திருக்கும் நேரத்தில் நாம் அதன் அருகே செல்ல நேர்ந்தால் சிங்கத்தால் நாம் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எனவே தான் சிங்கம் குறுக்கே போவதை பார்க்க நேர்ந்தால்,அது தங்கிச் செல்லும் நேரம் தவிர்க்க,நம்மையும் காப்பாற்றிக்கொள்ள சிறிது நேரம் நின்று பிறகு தொடர்ந்து செல்லவேண்டும்.இது நமது முன்னோர் அறிவுரை.

உணர்த்தும் நிலவரம்:
#காட்டுப் பயணத்தையும், நாட்டுப் பயணத்தையும் ஒன்றாய் குழப்பி விட்டோம்
#பூனைக்கும் சிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டோம்.

உணர வேண்டியது:
#பாவம் பூனைகள்

Saturday, September 20, 2008

ஆரம்பம்.வேண்டுதலோடு.

எல்லோரது
கனவும் மெய்ப்பட வேண்டும்.!

வேண்டிக்கொள்ளும்,
துரை.ந.உ தூத்துக்குடி.628 003
9443337783.