Tuesday, January 20, 2009

தீப ஆராதனை.!






இது நிகழ் காலம்
பூசை நேரம்
மின் விளக்குகளின் வெளிச்ச வெள்ளம்.
பகல்போல காட்சி அளிக்கும் கோவில் பிரகாரம்.
பாதரச விளக்கொளியில் பளபளக்கும் கற்ப கிரகம்.
அலங்கார விளக்குகளால் சூழப்பட்டுள்ள கடவுள்.
கடவுள் முன் காட்டப்படும் தீப ஆராதனை முடியும் தருவாயில்,
கடவுளை விட்டு தீபத்தை விலக்கி உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
பக்தர்கள் அனைவரும் இருகரம் தலைக்கு மேல்கூப்பி அந்த தீபத்தை வணங்குகிறார்கள்

சிறிது பின் நோக்கிச் செல்வோம் !
கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள்
முன்னோர்களின் அந்தக்காலம்
மின் வசதி இல்லாத நேரம்
இருண்ட கற்ப கிரகம்
கடவுள் முகம் பார்க்க கண் இமைக்காமல் நெடுநேரம் காத்திருக்கிறார்கள் பக்தர்கள்.
முன் அறிவிப்பில்லாமல்,யாரும் எதிர்பார்க்காத ஒரு நொடியில்
தீபமேற்றி கடவுள் முகம் முன்னால் காட்டுகிறார்கள்.
திடீரென பரவும் ஒளியில் (ப்ளாஷ் லைட்)தெரியும் கடவுளின் பிம்பம்
புகைப்படம் போல மனதுக்குள் அப்படியே படிகிறது
மக்கள் இருகரம் கூப்பி பரவசத்தோடு கடவுளை வணங்குகிறார்கள்

மீண்டும் நிகழ்காலம் வருவோம்!
இடைப்பட்ட காலத்தில்
கடவுளிடம் இருந்து நம்மையும் அறியாமல்
தீபத்தை நோக்கித் திசை திரும்பி இருக்கிறோம்/திருப்பி விடப்பட்டிருக்கிறோம்

1 comment:

சுப்ரமணியன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல வலை பூ கண்ட மகிழ்சி நன்றி திரு துரை அவர்களே

www.tamilanmanian.wordpress.com